-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


சனி, 27 அக்டோபர், 2012

ஆற்று வெள்ளத்தில் விழுந்த மாணவன் உயிருடன் மீட்பு

  நவம்பர் 28,2010
தலைவாசல் அருகே வசிஷ்ட நதி வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட மாணவனை, வாலிபர் ஒருவர் ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினார். சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி பகுதியில் தொடர் மழை காரணமாக வசிஷ்ட நதி, சுவேத நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வசிஷ்ட நதி குறுக்கே உள்ள ஆறகளூர்- பெரியேரி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தை கடந்து சென்ற பள்ளி மாணவன் சுரேஷ் (15) தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். வெள்ளத்தில் சிக்கிய சுரேஷ் கூச்சலிட்டார். அதை பார்த்த பெரியேரியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் ஆற்றில் குதித்து ஒரு மணி நேரம் போராடி, சுரேஷை வெள்ளாறு அணைக்கட்டு பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்டு வந்தார். மாணவரை மீட்டு வந்த வாலிபரை பொதுமக்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக