-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


வெள்ளி, 26 அக்டோபர், 2012

எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் பள்ளி மாவட்ட அளவில் 2ம் இடம்



07 JUN 2012

தலைவாசல் அருகே வி.கூட்ரோடு பெரியேரி, எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், சேலம் கிழக்கு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வி.கூட்ரோடு பெரியேரி கிராமத்தில், எஸ்.ஆர்.எம்., முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவுகளில், மாணவி இலக்கியா, 500க்கு 489 மதிப்பெண் பெற்று, சேலம் கிழக்கு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.மேலும், மாணவி சத்தியப்பிரியா, 487 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாம் இடமும், மாணவர் ராஜவேலு 486 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும், மாணவர் ரஞ்சித் 478 மதிப்பெண் பெற்று, நான்காம் இடமும், மாணவி சவுந்தர்யா 475 மதிப்பெண் பெற்று, ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.தவிர, 470 மதிப்பெண்ணுக்கு மேல் ஐந்து பேரும், 450க்கு மேல் 17 பேரும், 400க்கு மேல், 45 மாணவர்களும், மதிப்பெண் பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, நினைவு பரிசுகள் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக